கோயம்புதூர் கே . கே . புதூர் பார்க் முன்பு 15.8.2017 அன்று தேசீய கொடி ஏற்றும் விழாவில் படித்த கவிதை – கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் ஆடுவோமே , பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடி மகிழச் சொன்னார் பாரதியார் எப்போது? சுதந்திரம் கிடக்கும் முன்பு ! பாரதியைவிட ஒரு தீர்க்கதரிசி, வேறு யார் ? பாரதியின் பாடல்கள், பாமாலை பைந்தமிழுக்கு அது, பூமாலை . வீரமிக்க பாடல்கள் , சுதந்திர தாகமிக்க பாடல்கள் . இத்தனைப் புரட்சிப் பாடல்களை இந்தியாவில் எவரும் பாடியதில்லை பாடல்களில் இத்தனை வீரம் , இத்தனை துணிச்சல் இந்தியாவில் எவருக்கும் இருந்ததில்லை ’ தன்னலமற்ற தலைவர்கள் அதிகம் அன்று தன்னலமிக்க தலைவர்கள் அதிகம் இன்று . வீட்டை மறந்து நாட்டைக் காத்திட்ட தலைவர்கள் – அன்று நாட்டை மறந்து வீட்டைக் காக்கும் தலைவர்கள் – இன்று . பெற்ற சுதந்திரம் பேணிக் காத்திடவும் நாட்டிலும் , வீட்டிலும் நல்லது நடந்திடவும் நல்ல பல தலைவர்கள் நமது நாட்டில் தோன்...