Posts

Showing posts from August, 2017

மன்னிப்பு -- சிறுகதை

                                                மன்னிப்பு                         -- சிறுகதை                    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்                                                                                                                                                     ...
கோயம்புதூர் கே . கே . புதூர் பார்க் முன்பு 15.8.2017 அன்று தேசீய கொடி ஏற்றும் விழாவில் படித்த கவிதை – கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் ஆடுவோமே , பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடி மகிழச் சொன்னார் பாரதியார் எப்போது? சுதந்திரம் கிடக்கும் முன்பு ! பாரதியைவிட ஒரு தீர்க்கதரிசி,   வேறு யார் ? பாரதியின் பாடல்கள்,   பாமாலை பைந்தமிழுக்கு அது,   பூமாலை . வீரமிக்க பாடல்கள் , சுதந்திர தாகமிக்க பாடல்கள் . இத்தனைப் புரட்சிப் பாடல்களை இந்தியாவில் எவரும் பாடியதில்லை பாடல்களில் இத்தனை வீரம் , இத்தனை துணிச்சல் இந்தியாவில் எவருக்கும் இருந்ததில்லை ’ தன்னலமற்ற தலைவர்கள் அதிகம் அன்று தன்னலமிக்க தலைவர்கள் அதிகம் இன்று . வீட்டை மறந்து நாட்டைக் காத்திட்ட தலைவர்கள் – அன்று நாட்டை மறந்து வீட்டைக் காக்கும் தலைவர்கள் – இன்று . பெற்ற சுதந்திரம்   பேணிக் காத்திடவும் நாட்டிலும் , வீட்டிலும்   நல்லது நடந்திடவும் நல்ல பல தலைவர்கள்   நமது நாட்டில் தோன்...

பெண் உரிமை - ஒரு வேண்டுகோள்

பெண் உரிமை - ஒரு வேண்டுகோள் பெண்களுக்கு உரிமை வேண்டும் என்பதில் இருவேறு எண்ணமில்லை! ஆனால்   பாதி உரிமை கேட்கும் பெண்கள் எடுப்பதோ முழு உரிமை! முழு உரிமை எடுப்பதோ, கொடுப்பதோ என்பது இரு புறம் கூரிய கத்தியை சிறு குழந்தை கையில் கொடுப்பது போல! எந்த நேரம், யாரை அது தாக்கும் என்பது குழந்தைக்கும் தெரியாது! கூரிய கத்தியைக் கொடுத்தவர்க்கும் தெரியாது! கூரிய கத்தியைத் திரும்ப வாங்கவும் முடியாது! சம உரிமையைப் பெண்கள் ஒருபோதும் மதிப்பதில்லை! முழு உரிமை கிடைத்தபின் யாரையும் மதிப்பதில்லை! எப்படியென்றால் வரம் கொடுத்தவன் தலையில் கை வைப்பது போல! நல்லது நடக்க வேண்டும் என்றால் சம உரிமை மீறாமல் காப்பது நல்லது என்பதை அறிவோம். ஏனென்றால் நாட்டிலும், நமது வீட்டிலும் நல்லது நடக்க வேண்டும்! ஆதலினால் அகிலத்தில் அதிக அன்புடன் ஆடவரே செயல் படுங்கள்!    

கண்ணன் பக்திப் பாடல் - பாடியவர் வீரமணி

கண்ணன் பக்திப் பாடல் -  பாடியவர் வீரமணி கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை  கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்தான்.  மாதவப் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்  ஓதிய மொழி கேட்டு கண்ணன் வந்தான். வாரணம் அணியாக வலம் வரும் மணநாளில்  மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்.  மார்கழிப் பனி நாளில் மங்கையர் இடந்தோளில்  கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான். ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்  அஷ்டமித் திதி பார்த்து கண்ணன் வந்தான்.  அந்தியில் இடம் மாறி சந்தியில் முகம் மாறி  சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான். பொன் மகள் பாஞ்சாலி பூங்குயில் தனைக்காக்க தென்றலின் வடிவாக கண்ணன் வந்தான்.  போர்முகப் பார்த்தனின் புயங்களைக் காத்திட  கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான். ஏழைக் குசேலனுக்குத் தோழமை தான் தந்து  வாழ வைப்பேன் என்று கண்ணன் வந்தான்.  வாழிய பாடுங்கள் வலம் வந்து தேடுங்கள்  வந்து நிற்பான் அந்தக் கண்ணன் என்பான்.