23.3.2023 அன்று நடந்த பொன்னியின் செல்வன்
இசை வெளியீட்டு விழா சன் தொலைக் காட்சியில் மதியம் 3 மணியிலிருந்து 6 மணி வரை ஒளிபரப்பானது.
மிகவும் பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார்கள். ஆனால்
திரு சரத்குமார் பார்த்திபனுடன் பேசிய சில விஷயங்கள் பார்ப்பவர்களுடைய / கேட்பவர்களுடைய
மனதை வருத்தும் வகையில் மிகவும் ஆபாசமாக இருந்தன.
1. இருவரில் யார் சிறப்பாக நடித்திருந்தார்கள் என்று பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்த சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்த பார்த்திபனுaம் பேசுகிறார்கள். அவ்வமயம் சரத்குமார் பார்த்திபனைப் பார்த்து “சின்ன பழுவேட்டரையரான நீ உலக அழகியான நந்தினியை மனதில் அடைய விரும்பினாலும் அதை வெளிக் காட்டாமல் இருந்த உன் நடிப்புதான் சிறந்தது. “ என்கிறார். சின்னப் பழுவேட்டரையர் பற்றி திரு கல்கி ஒரு போதும் இது போல் எழுதியதில்லை. சரத்குமார் பேச்சு சின்னப் பழுவேட்டரையர் கதா பாத்திரத்தையே கேவலப்படுத்து வதாக இருந்தது.
வணக்கம். வாழ்த்துகள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 25.4.2023
Comments
Post a Comment