Posts

Showing posts from February, 2019

யார் அந்த நாற்பது பேர் ?

                 யார் அந்த நாற்பது பேர் ? கருவில்   சுமந்து,   பின் மடியில்   சுமந்த என் அன்னை ! உருவில் வளர்ந்து, பின் தோளில் சுமந்த என் தந்தை ! என் மீது பாசம் கொண்டவர்கள்; அளவிலா நேசம் கொண்டவர்கள் ! இவர்கள் இருவரையும் நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு நாடு காக்க எல்லை சென்றேன். என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன். பெண்ணுக்குரியப் பேரேழிலாள், இந்த மண்ணுக்குரியப் பண்புடையாள்; அவள் என் கண்ணுக்கினிய   காதல்   மனையாள் ! கட்டித் தங்கமென, சுட்டும் சுடர் விழியுடன் தொட்டிலில் உறங்கும் எங்கள் குழந்தை ! இவர்கள் இருவரையும் நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு நாடு காக்க எல்லை சென்றேன். என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன். உற்றவர்கள், உறவினர்கள், உயிர் நண்பர்கள் பெற்ற மண், அந்த மண் பெற்ற மரங்கள், செடி கொடிகள், இலைகள், மலர்கள் நீந்தி விளையாடிய ஆற்று நீர், குளத்து நீர் கிணற்று நீர், வாய்க்கால், வரப்பு,...

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

        கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள் உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!                              --- 1   ( கடவுள் வாழ்த்து) அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைதாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அஞ்சிலே ஒன்று வைத்தான் ; அவன் எம்மை அளித்துக் காப்பான் . ( ஆஞ்சனேயர் பற்றி கம்பனின் அற்புத பாடல்)   சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் , கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் , வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சில் தாங்காது , அப்புறம் சுழன்று , கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என , போயிற்று அன்றே !             ...

வாடிய மரங்களும் வாடிய உள்ளமும்

வாடிய மரங்களும் வாடிய உள்ளமும் அக நகும் நண்பர் ஒருவர் அக மகிழ பூங்கா சென்றார். அங்கு, பூத்திருக்கும் நறு மலர்கள் காண ! காத்திருக்கும் கரு வண்டுகள் காண ! பார்த்திருக்கும் பல பறவைகள் காண ! வாய்த்திருக்கும் நல வளங்கள் காண ! ஆனால் ஐயகோ ! மனம் பதற வாடிய மரங்களைக் கண்டார் வாடிய மனநிலை கொண்டார் . உலர்ந்த இலைகள்; தளர்ந்த கிளைகள்; மணமில்லா மலர்கள் பலமில்லா வேர்கள் கண்ட காட்சியும் மரங்கள் சொன்ன   சாட்சியும் கண்கள் கலங்கியதும் நெஞ்சம் குலுங்கியது. யார், இந்த மரங்களை வஞ்சித்தது ? அந்த ஆண்டவனா ? அல்லது அந்த ஆண்டவன் கண்ட இந்த   மானிடனா? இல்லை விண்ணின்று பெய்யாத சிறு துளியா ? கண்ணின்று இல்லாத ஒரு பழியா ? ஏனிந்த செயலில்லா வீண் பொழுது ஆராய்ச்சி ? இதிலேனும் பலனுண்டா சொல் தாயே மீனாட்சி ! கடவுளின் கருணை மனிதனுக்குப் பெருமை ! தண்ணீரின் கருணை மரங்களுக்கு அருமை ! அன்பில் தன் மனம் கசிந்த   அன்பரசின் கரங்களிலிருந்து வெள்ளமெனப் பாய்ந்தது தண்ணீர் ! கண் கொள்ளாக் காட்சி அது கண்டவர் கண்களில் கண்ணீர், சொல்...