யார் அந்த நாற்பது பேர் ?
யார் அந்த நாற்பது பேர் ? கருவில் சுமந்து, பின் மடியில் சுமந்த என் அன்னை ! உருவில் வளர்ந்து, பின் தோளில் சுமந்த என் தந்தை ! என் மீது பாசம் கொண்டவர்கள்; அளவிலா நேசம் கொண்டவர்கள் ! இவர்கள் இருவரையும் நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு நாடு காக்க எல்லை சென்றேன். என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன். பெண்ணுக்குரியப் பேரேழிலாள், இந்த மண்ணுக்குரியப் பண்புடையாள்; அவள் என் கண்ணுக்கினிய காதல் மனையாள் ! கட்டித் தங்கமென, சுட்டும் சுடர் விழியுடன் தொட்டிலில் உறங்கும் எங்கள் குழந்தை ! இவர்கள் இருவரையும் நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு நாடு காக்க எல்லை சென்றேன். என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன். உற்றவர்கள், உறவினர்கள், உயிர் நண்பர்கள் பெற்ற மண், அந்த மண் பெற்ற மரங்கள், செடி கொடிகள், இலைகள், மலர்கள் நீந்தி விளையாடிய ஆற்று நீர், குளத்து நீர் கிணற்று நீர், வாய்க்கால், வரப்பு,...