பருத்தி ஆடைகளின் சிறப்பு பற்றி
             பருத்தி
ஆடைகளின் சிறப்பு பற்றி
'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' – நம் நாடு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்
மெட்டில் எழுதியது  
நல்ல ஆடை அணிந்து வரும் பிள்ளைகளே - ஆடை 
வரும் வழி, நீங்கள் அறிய வேண்டும் முல்லைகளே
கதராடை வேண்டும், காந்தியும் சொன்னார் 
கைத்தறியாடை விற்றார், அண்ணாவும் அன்று
ஆடைக்கு நூலே தேவை என்றால் 
நூல் எங்கு கிடைக்கும், ஆராய்ந்து பார்ப்போம்
செடி நல்ல வளர கரிசல் மண் வேண்டும்
காய் வடித்துச் சிதறும், பஞ்சாகப் பறக்கும்
பஞ்சே நூலாகும், நெசவில் நூல் ஆடை
ஆடை அணிவீர், அறிவில் உயர்வீர். 
Comments
Post a Comment