Posts

Showing posts from July, 2017
தொழிலாளர் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் நண்பர் திரு அ.குமர குருபரன் அவர்களைப் பாராட்டி வழங்கிய வாழ்த்து மடல் அல்லி மலர் அழகெல்லாம் ஆதவனுக்குச் சொந்தம் மல்லிகையின் மலரெல்லாம் மாந்தருக்குச் சொந்தம். அகநகும் நட்பெல்லாம் குமரனுக்கே சொந்தம், நாட்டைக் காத்திடவும், நற்பணி ஆற்றிடவும் வீட்டைத் துறந்து விட்டு வீர நடை போட்டவன். பெற்றவர் கடமை தன்னைப் பேணிக் காத்திடவும் உற்ற தமிழ் நண்பர்களின் உறவுகள் பூத்திடவும் ஓடி வந்தான் குமரனவன், உயர்ந்த தமிழ்ச் செல்வனவன். எந்த நாட்கள் நாம் சந்திக்கவில்லை? எதைப்பற்றி நாம் சிந்திக்கவில்லை? சந்திப் பிள்ளையார் கோயில் முன்பு சந்தித்தோம் பலமுறை, சிந்தித்தோம் வரையிலை. அறிவுக்கு அரசியலும், ஆன்மாவுக்கு ஆன்மீகமும். இனிமைக்குக் காதலும், காதலுக்குக்  கவிதைகளும். சிந்தனைக்கு இலக்கியமும், சிறந்த ஒரு தத்துவமும். பண்புக்கு ஒழுக்கமும் பகிர்ந்தோம் நமக்குள்ளே. உணர்வுகள் வேறுபட்டாலும் உள்ளங்கள் வேறுபட்டதில்லை. சுற்றி வந்த இடங்கள் சொல்லும், அறிவு கற்று வந்த இடங்கள் சொல்லும், நாம் பெற்று வந்த பெருமைகளை, பிறர் போற்றி ...

சில திவ்ய தேச தரிசனங்கள்

             சில திவ்ய தேச தரிசனங்கள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் இந்தியா முழுவதும் அமைந்திருக்கின்றன . அந்த திவ்ய தேசங்கள் தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ளன .  அதில் சில திவ்ய தேசங்களைப் பார்க்க விரும்பியதால் , செப்டம்பர் 13 - 16 தேதிகளில் சென்று வர நானும் என் கணவரும் ஒரு திட்டம் தயார் பண்ணினோம் . நாங்கள் இருவரும் கோயம்புத்தூரிலிருந்து 13 ந் தேதி காலை 7 மணி ஜன ஷதாப்தி ரயிலில் புறப்பட்டு 2 மணிக்கு கும்பகோணம் சென்றோம் . மகாமகத் தெப்பக்குளத்திற்க்கு அருகில் உள்ள ஹோட்டல் ராயாஸில் தங்கினோம் . தங்கிய ரூம் நன்றாக இருந்தது . ஆனால் மதிய உணவு ஒன்று ஆர்டர் கொடுத்தோம் . கொண்டு வந்ததோ , 3 பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு வந்தது . சுவைக்கும் வந்த உணவுக்கும் சம்பந்தமில்லை . 108 திவ்ய தேசங்களுள் அதிகமான பெருமாள் கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டன . அதிலும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்கள் அமைந்த காரணம் . - திருமங்கை ஆழ்வார் முதலில் மன்னராக இருந்தவர் . ஒருநாள் ...

பருத்தி ஆடைகளின் சிறப்பு பற்றி

              பருத்தி ஆடைகளின் சிறப்பு பற்றி 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' – நம் நாடு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் மெட்டில் எழுதியது   நல்ல ஆடை அணிந்து வரும் பிள்ளைகளே -  ஆடை  வரும் வழி, நீங்கள் அறிய வேண்டும் முல்லைகளே கதராடை வேண்டும், காந்தியும் சொன்னார்  கைத்தறியாடை விற்றார், அண்ணாவும் அன்று ஆடைக்கு நூலே தேவை என்றால் நூல் எங்கு கிடைக்கும், ஆராய்ந்து பார்ப்போம் செடி நல்ல வளர  கரிசல்  மண் வேண்டும் காய் வடித்துச் சிதறும், பஞ்சாகப் பறக்கும் பஞ்சே நூலாகும், நெசவில் நூல் ஆடை ஆடை அணிவீர், அறிவில் உயர்வீர்.
திவ்ய தேச தரிசனம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் இந்தியா முழுவதும் அமைந்திருக்கின்றன. அந்த திவ்ய தேசங்கள் தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ளன.  செப்டம்பர் 13 - 16 தேதிகளில் ஒரு திவ்ய தேச தரிசனம் செய்யத் திட்டம் தயாரானது. உடனடியாக தூத்துக்குடியில் இருக்கும் வடிவு, வடிவு மாப்பிள்ளை இருவருக்கும் திட்டம் தெரியப்படுத்தப் பட்டது. அவர்களும் உடனே சம்மதம் சொன்னார்கள். நாங்கள் இருவரும் கோயம்புத்தூரிலிருந்து 13 ந் தேதி காலை 7 மணி ரயிலில் புறப்பட்டு 2 மணிக்கு கும்பகோணம் சென்றோம். அவர்கள் இருவரும் காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு 4 மணிக்கு கும்பகோணம் வந்தார்கள். மகாமகத் தெப்பக்குளத்திற்க்கு அருகில் உள்ள ஹோட்டல் ராயாஸில் தங்கினோம். 108 திவ்ய தேசங்களுள் அதிகமான பெருமாள் கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டன.அதிலும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்கள் அமைந்த காரணம். - திருமங்கை ஆழ்வார் முதலில் மன்னராக இருந்தவர். ஒருநாள் திருநாங்கூரில் உள்ள குளத்தில் குமுதவல்லி நாச்சியார் குளித்துவிட்டு வரும் போது, பார்த்தவர் திருமணம் செய்து கொள்ள விர...