Posts

Showing posts from August, 2020

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

    திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆமாம் ! திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவுக்கு மட்டும் ஏன் இந்த சுவை? காரணங்கள் என்னவென்று பார்ப்போமா? இராஜஸ்தானிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிங் என்ற சிங்க இனத்தவர்கள் திருநெல்வேலி வந்தார்கள். அவர்கள் தயாரித்த இனிப்புகளில் அல்வாவின் சுவை சுற்று வட்டாரங்களில் வசித்த வந்த மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல் அல்வா தயார் செய்ய மாட்டார்கள். எனவேதான், மாலை 5 மணிக்குக் கடையைத் திறந்து இரவு 8 – 9 மணிக்குக் கடையை அடைத்து விடுவார்கள். பல ஆண்டுகளாக, எனக்குத் தெரிந்து சுமார் 50 ஆண்டுகளாக, இந்த நடைமுறை இருந்து வருகிறது. தரமுள்ள பஞ்சாப் கோதுமையை ஊற வைத்து, கைகளால் உரலில் இட்டு அரைத்துப் பால் எடுக்கிறார்கள். ( மற்ற கடைகளில் இயந்திரங்களில் அரைத்துப் பால் எடுப்பது வழக்கம் ). அல்வா தயாரிக்கும் முறை, பக்குவம் சிங் குடும்பத்தின் இரகசியம். ஒரு நாள் தயாரித்த அல்வா மறு நாள்தான் விற்பனைக்கு வரும். தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் ஒரு முக்கிய காரணம் என்று திரு ஹரிசிங் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஏன் ?   தாமிர...

திருநெல்வேலி நகரமும் பூரிக் கிழங்கு மசாலும்

       திருநெல்வேலி நகரமும் பூரிக் கிழங்கு மசாலும்                                                                       கே . எஸ் . கோபாலகிருஷ்ணன்                                                                         முது நிலை மேலாளர் ஓய்வு , கனரா வங்கி           திருநெல்வேலிக்கும் பூரிக் கிழங்குக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? திருநெல்வேலி அல்வாதானே உலகப் பிரசித்தி பெற்றது, இதில் பூரிக் கிழங்கு எப்படி வந்தது என்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வருவது நியாயம்தான்.      எனக்குத் தெரிந்தவரை திருநெல்வேலியில் ...

திருநெல்வேலி நகரமும் திரையரங்குகளும்

                      திருநெல்வேலி   நகரமும்   திரையரங்குகளும்        -கே.எஸ்.கோபால கிருஷ்ணன், முது நிலை மேலாளர், கனரா வங்கி           திருநெல்வேலி நகரம் என்பது டவுண் , ஜங்ஷன் , பாளையம்கோட்டை ( இனி பாளை என்றே குறிப்பிடுவோம் ) என்று மூன்று இடங்களும் சேர்ந்தது . ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் திருநெல்வேலியில் மூன்று திரையரங்குகளே இருந்தன . ராயல் தியேட்டர் , பாப்புலர் தியேட்டர் , பாலஸ் - டி - வேல்ஸ் என்று பெயர்கள் கொண்ட இந்த மூன்றும்தான் .          ராயல் தியேட்டரை டவுண் நெல்லையப்பர் கோயிலுக்கு வடக்கே இருந்ததால் வடக்குக் கொட்டகை என்றும் , பாப்புலர் தியேட்டர் கோயிலுக்குத் தெற்கே இருந்ததால் தெற்குக் கொட்டகை என்றும் , பாலஸ் – டி - வேல்ஸை வீராவரம் ( வீரராகவபுரம் ) தியேட்டர் என்றும் அந்தக் காலத்தில் திருநெல்வேலி டவுணில் உள்ள பெண்கள் குறிப...