Posts

Showing posts from March, 2019

ஓநாய்களின் கூட்டம்

                                                                                                                                           15.3.2019                 ஓநாய்களின் கூட்டம் பல நாட்கள் தவமிருந்து பத்து மாதங்கள் சுமந்து   அவளைப் பெற்றோமடா மார்பிலும், எங்கள் தோளிலும் சுமந்தும், திரிந்தும் அவளை வளர்த்தோமடா பாலூட்டி அவளை வளர்த்தோமடா, நல்ல பண்பூட்டி அவளை வளர்த்தோமடா. - அவள் பள்ளி செல்லும் அழகைப் பார்த்தோமடா துள்ளும் மானாக, மயிலாக அவளைக் கண்டோமடா மடியில் தவழ்ந்து, மார்பில் வளர்ந்த மழலை அவளடா -- எங்கள் வீட்டின் மகாலட்சுமி அவளடா...

காதலித்தால் என்ன ? -- சிறு கதை

                                           காதலித்தால் என்ன ?                                              -- சிறு கதை என் பெயர் லலிதா. சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும் கோயமுத்தூர் வந்து 25 ஆண்டுகளாகி விட்டன. ஒருநாள், என் கணவர் ராஜ சேகரிடம் “ இந்த வாரம் திருச்சி சென்று, ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வருவோமா ? “ என்று கேட்டேன் . அவர் உடனே , “ நான் 30 ஆண்டுகள் வேலை பார்த்து, ஓய்வு பெற்று 2 ஆண்டுகளாகி விட்டன. இனிமேல் நீ எங்கெல்லாம் செல்ல வேண்டுமென விரும்புகிறாயோ, அங்கெல்லாம் தாராளமாகப் போய் வரலாம். மாதா மாதம் தமிழ் ஃபெமினாவில் சுற்றுலா பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. அந்த மாத இதழ்களை பத்திரமாக எடுத்து வைத்துக்கோ ” என்றார். கோவையிலிருந்து, மறுநாள் காலை 7 ம...