திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை
                  திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை                                      தென்றல்  தவழ்ந்து  வரும் ,   எழில்  மேகம்    தழுவ   வரும்    தேன்  மதுரத்  தமிழோசை, குயில் ஓசை   பரவி வரும்    தென்  பொதிகை    மலை, எங்கள் மலை !     குறு  முனிவன்  தவம்  செய்த  பொதிகை  மலை   நறு  மலர்கள்  மணம்  பரப்பும்  பொதிகை  மலை   சிறு  நதிகள்  ஓடி  வரும்,  பெரு  நதியாய்    கூடி  வரும்   பெறு  வளங்கள்  நாடி  வரும் ,   பெருமையெல்லாம் தேடி வரும்   தென் பொதிகை மலை எங்கள் மலை!      மலையினில்  கருவாகி , அருவியென  உருவாகி   நதியென  இரு  கரைகள்  தழுவி  ஓடி ,   வழி எல்லாம் ஊற்று மிகுந்து வரும்,   வற்றாமல் வளம் பார்க்கும், நலம்  சேர்க்கும்   தாமிரபரணி நதி இருப்பது     எங்கள் திருநெல்வேலி !.     காலையில்  கண்  விழித்தேன் ,   கடமையெல்லாம்  முடித்தேன் .   நடைப்  பயிற்சி  நான் வந்தேன்   நலம்  வ...