Posts

Showing posts from April, 2018

திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை

         திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை                                தென்றல் தவழ்ந்து வரும் ,   எழில் மேகம்   தழுவ   வரும் தேன் மதுரத் தமிழோசை, குயில் ஓசை   பரவி வரும் தென் பொதிகை   மலை, எங்கள் மலை ! குறு முனிவன் தவம் செய்த பொதிகை மலை நறு மலர்கள் மணம் பரப்பும் பொதிகை மலை சிறு நதிகள் ஓடி வரும், பெரு நதியாய்   கூடி வரும் பெறு வளங்கள் நாடி வரும் , பெருமையெல்லாம் தேடி வரும் தென் பொதிகை மலை எங்கள் மலை! மலையினில் கருவாகி , அருவியென உருவாகி நதியென இரு கரைகள் தழுவி ஓடி , வழி எல்லாம் ஊற்று மிகுந்து வரும், வற்றாமல் வளம் பார்க்கும், நலம் சேர்க்கும் தாமிரபரணி நதி இருப்பது   எங்கள் திருநெல்வேலி !. காலையில் கண் விழித்தேன் , கடமையெல்லாம் முடித்தேன் . நடைப் பயிற்சி நான் வந்தேன் நலம் வ...

என்றும் வேண்டும் சுத்தம் –( மக்கும் குப்பை – மக்காத குப்பை)

                    திரு சோனாசலம்(பங்களூரு)என்ற நண்பர் கேட்டதற்கு இணங்க, ஆடியோவில் பதிவு செய்யப்பட்ட உரை       என்றும் வேண்டும் சுத்தம் –( மக்கும் குப்பை – மக்காத குப்பை) இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலாகத் தோன்றியவை பலவகையான பூச்சிகளும் , பல வகையான தாவரங் களும்தான் . மனிதர்களாகிய நாம் இந்தப் பூமிக்கு வந்தது மிகவும் சமீபத்தில்தான் , அதாவது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் . ஆரம்ப காலங்களில் தோன்றிய பூச்சிகளும் , தாவரங்களும் , பிறகு தோன்றிய விலங்குகளும் ஒரு போதும் இயற்கையை அழித்ததில்லை ; அழிக்க நினைத்ததும் இல்லை . அதனால் இயற்கை சூழ்நிலையோ , இயற்கையின் பன்முகத் தண்மையோ சிறிதளவும் பாதிக்கப்படவே இல்லை . அவையெல்லாம் இயற்கையில் கிடைக்கும் தாவர உணவுகளையோ , விலங்குகள் மற்ற மிருகங்களின் உணவுகளையோ உண்டு வாழ்ந்தன / தற்போதும் வாழ்ந்து வருகின்றன . அவற்றால் ஒரு போதும் இயற்கை சூழ்நிலை மாறுப...

திருநெல்வேலி நகரமும் திரையரங்குகளும்

        திருநெல்வேலி   நகரமும்   திரையரங்குகளும் திருநெல்வேலி நகரம் என்பது டவுண் , ஜங்ஷன் , பாளையம்கோட்டை ( இனி பாளை என்றே குறிப்பிடுவோம் ) என்று மூன்று இடங்களும் சேர்ந்தது . ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் திருநெல்வேலியில் மூன்று திரையரங்குகளே இருந்தன . ராயல் தியேட்டர் , பாப்புலர் தியேட்டர் , பாலஸ் - டி - வேல்ஸ் என்று பெயர்கள் கொண்ட இந்த மூன்றும்தான் . ராயல் தியேட்டரை டவுண் நெல்லையப்பர் கோயிலுக்கு வடக்கே இருந்ததால் வடக்குக் கொட்டகை என்றும் , பாப்புலர் தியேட்டர் கோயிலுக்குத் தெற்கே இருந்ததால் தெற்குக் கொட்டகை என்றும் , பாலஸ் – டி - வேல்ஸை வீராவரம் ( வீரராகவபுரம் ) தியேட்டர் என்றும் அந்தக் காலத்தில் திருநெல்வேலி டவுணில் உள்ள பெண்கள் குறிப்பிடுவது வழக்கம் . பாளையில் , மார்க்கட் பக்கத்தில் அசோக் தியேட்டர் ஒன்று இருந்தது . இந்தத் தியேட்டரில் புதுப்படங்களாக இல்லாமல் , இரண்டாவது சுற்றில் சினிமாக்கள் திரையிடப்பட்டது .   கிராமங்களிலுள்ள டூரிங் தியேட்டர்களில் , சினிமா தொடங்குவதற்க...