விண்ணின்று பெய்யும் மழை
விண்ணின்று பெய்யும் மழை 1.9.2017 இரண்டு நிமிடங்களில் இன் கவிதை இனிய தமிழ் மொழியில் என் கவிதை குடையொன்றும் தேவையில்லை மழையில் நனையுங்கள் என் கவிதை மழையில் நனையுங்கள் மழை இன்று பெய்யட்டும் மனித , மனம் நன்று மலரட்டும் ! மழை இங்கு பொழியட்டும்! நமது மனம் நன்கு குளிரட்டும்! மலர்கள் மணம் வீசி மலரட்டும் , மழலைகள் இதழ் திறந்து சிரிக்கட்டும் !. பயிர்கள் எல்லாம் தழைக்கட்டும் , உயிர்கள் எல்லாம் பிழைக்கட்டும் !. மழை நன்று பெய்யட்டும் ஆறுகள் அகன்று பெருகட்டும் , குளங்கள் நிரம்பி வழியட்டும் !. அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டட்டும் , ஆனந்தம் இருகைகள் தட்டட்டும் !. மழை நன்கு பொழியட்டும் நிலமகள் இன்று நனையட்டும்! நினைவுகள் நெஞ்சில் படரட்டும் !. உலகம் மிகவும் செழிக்கட்டும் , உன்னதம் உடன் உயரட்டும் !. மழை இங்கு பெய்யட்டும் மின்ன...